'மரமும் கிளைகளும்
எத்தனை உயரம் சென்றாலும்
வேர்கள்

விரும்புவது மண்ணை மட்டும்தான்'

'இது ஒரு
வித்தியாசமான படம் என்று
டிவி ப்ரொமோவில் நடிகரும் இயக்குநரும்
சொன்னபோதே புரிந்தது
இன்டர்வெல்லில்
நாலுபேர் வந்தாலும்
முட்டைபோண்டா பாப்கார்ன் போடுவார்களென்று'

'ஆனந்தவிகடனை
ஆவலுடன் வாங்கினேன்
பழையபுத்தகக்கடையில்
புதியஇதழ்கள் அலுப்புத்தட்டுவதால்'

'வந்திருந்த
இமெயிலை திறந்து படித்ததும்
பக்கத்தில் தபால்காரர் இல்லாத
வெறுமை தென்பட்டது'

'யாரோ
பார்த்துப்பார்த்து
கட்டியவீட்டை
இடித்துக்கொண்டிருக்க
புரிந்தது
பிள்ளைகள் யாரோ
சென்னை பங்களுருவூக்கு செல்ல
பெரிசுகள்
நாடுகடத்தப்படுகிறார்களென்று'

'செல்லை மட்டுமல்ல
அன்பையூம் அவ்வப்போது
டாப்அப்
செய்ய வேண்டியிருக்கிறது'

'சூடிக்கொடுத்தவளுக்கு
சுகமாய் தனி சந்நிதி
சூடாமல்
விரல்நோக கட்டிக்கொடுத்த
பெண்மணிகளுக்கு
அதே அழுக்குக்குடிசையூம்
அவல வாழ்க்கையூமாய்
பூவூடன் போகிறது
பொழுது '


Previous
Next Post »