சின்னதாய் ஒரு கதை: -விஜயநிலா



 அடாசு மாதநாவல்களில் எல்லாம் வருவது போலவே யாமினி சொன்னாள்.
"நான் லவ் பண்றேன்.என் காதலுக்கு நீதான் ஹெல்ப் பண்ணணும் "
 வழக்கமான கதைகளில் வருவது போல அவள் எனது மாமாவின் பெண்.கார்லி க்ளாஸ்ஸை இன்டியனைஸ் செய்த மாதிரி இருப்பாள் யாமினி.இப்போது எவனோ அவளை...
 பழி வாங்குடா மவனே என்றது உள்மனசு.
அப்புறம் ஒருநாள்-
 மொத்தமாய் பப்ஷாப்பை குத்தகை எடுத்த மாதிரி  வெர்மௌத்துடன் அப்பெர்டிஃப்பை கலந்தடித்துக் கொண்டிருந்தபோது சொன்னான் வினோத்.
"ஒரு சாமியார் இருக்கார்டா.தாயத்து கூட இல்லை.இருந்த இடத்துலேர்ந்தே என்னவோ ஸ்வாஹா சொல்றாராம்.நாம இஷ்டப்பட்டப் பொண்ணு நம்மை தேடி வந்து ..."
"வாட் டு யூ மீன்" என்றான் டேபிள் அருகில் இருந்த ஜஸ்டின் பைபர் சன்னமாக.
"ட்ராஷ்"என்றேன்.
 இன்னொருநாள்-
 யாமினி வந்திருந்தாள்.
 அவளை எனது வீட்டு கார்ஷெட்டிற்குள் வரச் சொன்னேன்.அங்கேதான் அதை வைத்திருக்கிறேன்.
 அது?
 சின்னதாய் ஒரு ஜெராக்ஸ் மெஷின்.
 மனிதர்களை ஜெராக்ஸ் செய்யூம் மெஷின்.
 யாமினி அதன் எதிரே அமர்ந்ததும் பொத்தானை ரகசியமாய் அமுக்க்க்கி விட்டேன்.
 திட்டம் இதுதான்.ஜெராக்ஸ் யாமினியூம் கிளம்பிப்போய் யாமினியின் காதலனுடன் மல்லுக்கட்டினால் நிச யாமினி என்ன செய்வாள்.எப்படி தான்தான் ஒரிஜினல் என்று நிருபிப்பாள்.
அப்புறம்...
 என்னாச்சர்யம்.
 ஒரு யாமினிக்கு ஒரு ஜெராக்ஸ் யாமினிதானே வரவேண்டும்.பொத்தானை அதிகமாய் அமுக்கி விட்டேனோ?
 இரண்டு ஜெராக்ஸ் யாமினிகள் எழுந்து வர..அவர்கள் பின்னால் இன்னும் நான்கு யாமினிகள் வர அவர்கள் பின்னால் இன்னும் பற்பல யாமினிகள் எழுந்து வர...
"மச்சான் நான் சொல்லலே.சாமியாரு ஸ்வாஹா அழுத்தமா சொல்லிட்டாரு.உன் யாமினி உன் கிட்ட வந்து உன்னை கீழே தள்ளி இறுக்க அணைச்சி உன்னை..." எஸ்எம்எஸ்ஸில் வினோத்.
 அத்தனை யாமினிகளும் என்னை கீழே தள்ளி என் மீது மாட்ரிக்ஸ் பட வில்லன்கள் ரேஞ்சில் அமுக்க என் இதயம் பீறிட்டுக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தது.
                  --------------------------
பி.கு:சும்மா கவிதை எழுதி எழுதி போரடித்ததால் இந்த முறை கதை.
Previous
Next Post »

2 comments

Click here for comments
Unknown
admin
September 19, 2015 at 7:01 AM ×

யா 'மினி' கதை

Reply
avatar
September 19, 2015 at 12:20 PM ×

very good & sharp comment.Good.thanks.

Reply
avatar