"அதெப்படி நீ மட்டும்..."


'ஆழமாய்
ஒரு பார்வை
ஆயிரம் விஷயங்களை
அனாயாசமாய்
அடித்துச் சொல்லிவிடுகிறாய்
சில நேரங்களில்
பார்க்காமலே
ஒரு பார்வை
எதுவோ தவறென்று
யோசிக்க வைத்து விடுகிறாய்
பார்த்தும் பாராமல்
ஒரு பார்வை
இன்னுமா திருந்தவில்லையென்று
கெடுவைத்து
மிரட்டிப் பார்த்து விடுகிறாய்
கண்கள் மூடியே
ஒரு பார்வை
புரிஞ்சிக்கோ
இந்த பக்கமே வந்து விடாதேயென்று
எச்சரித்து விடுகிறாய்
அப்புறம்
பரவசப்படுத்துவதாய் திடீரென
ஒரு பார்வை
அத்தனையூம் மன்னித்து விட்டதாய்
கண்களால்
அணைத்துக் கொண்டு விடுகிறாய்
உன்னால் மட்டுமே
முடிகின்ற சாகசமல்லவா
இது'
Previous
Next Post »

3 comments

Click here for comments
November 22, 2015 at 7:33 PM ×

கண்களால் அணைக்கிற காதல் சுகம்..

Reply
avatar
November 22, 2015 at 7:33 PM ×

கண்களால் அணைக்கிற காதல் சுகம்..

Reply
avatar
November 24, 2015 at 1:05 PM ×

மிக்க நன்றி ரிஷபன்

Reply
avatar