"பெண்கள்..."


'வலிகள் சுமப்பதே
தெரியாமல்
விழிகள் இமைப்பது
அன்பென்று
சொல்லாமல் சொல்லும்

சாண்பிள்ளையானாலும்
ஆண்பிள்ளைதான்
வாழ்வில்
பெண்பிள்ளையில்லையேல்
வீண்பிள்ளைதான்

சாதித்தவன்
பின்னால் நிற்பவளல்ல
பெண்
அவனை முன்னால் தள்ளியவளே
அவள்தான்

அழுவதற்கு நேரமில்லாததால்தான்
அழுகை சீரியல்களில்
அமர்கிறார்கள் சிலநேரம்

இப்போதெல்லாம்
விட்டுக்கொடுப்பதும்
தியாகம் செய்வதும்
வீட்டு வேலைகளில் ஒன்றாகிவிட்டது

யார் பெரிதென்ற கேள்வியே
அவளுக்கு வரவில்லை
காலைத் துரக்கி
தப்பாட்டம் ஆடி ஜெயித்த
ஆணுக்கே
அந்த சந்தேகம் வந்தது

தன்னுடலில் பாதியை
கொடுத்தவன் தானேன்று
தப்பான கதையே
இங்கே உலவி வருகிறது
உண்மையில்
அவள் தந்த உடலல்லவா
அவன்?

முள்ளில்லாத ரோஜா
ஒன்றே ஒன்றுதான்
ஆம்

பெண்ணென்ற ஒன்றே ஒன்றுதான்.'
Previous
Next Post »