'எதையூம் யோசிக்காமல்
கண்களை மூடிக்கொண்டிருந்தால் கூட
வந்து
அமர்ந்து விடுகிறாய்
மனதிலும் மனதினுள்ளே மடியிலும்
ஞாயிறுகளில்
எந்த சேனலை வைத்தாலும்
கைகள் ரிமோட்டை அநிச்சையாய்
அழுத்திக் கொண்டே இருப்பது
வேறு சேனல்களை பார்ப்பதற்காக அல்ல
அடுத்தடுத்த சேனல்களின் பின்னால்
உன் முகத்தை
எங்கேனும் காண முடியூமா என்ற
ஆதங்கத்தினால்தான் என்று
புரிந்த சமயத்தில்
மனதில் ஏதோ கேட்டது
ரிமோட்டை எதற்கு பாடாய்படுத்துகிறாய்
என்று
உன் வீட்டில் யாரோ
திட்டிக்கொண்டிருப்பது...'
------------------------------------------------
'எதற்காகவோ
மனம் ஏங்கிக் கொண்டேயிருக்கிறது
எதனால் என்றே தெரியவில்லை
உனக்காகவா?
உனது சின்னஞ்சிறு பார்வைக்காகவா?
எனக்காக ரிசர்வ் செய்து வைத்தது போன்ற
உன் புன்னகைக்காகவா?
அருகில் வந்தாலும்
அருகருகே அமர்ந்தாலும்
ஏதும் பேசிக்கொள்ளாமல்
தொலைவில் பார்ப்பது போல்
என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாயே
அதற்காகவா?
யாரிடம் பேசினாலும்
மணிக்கணக்காக சளசளவென்று
பேசிக்கொண்டேயிருப்பாயே
என்னிடம் மட்டும் ஏதும் பேசாதிருந்து விட்டு
அதற்காகவா?
எதற்கென்றே தெரியவில்லை
நாளைக்கு
எப்போதும் போல எதிரே வந்து விடாதே
வந்தாலும் சட்டென்று
புன்னகைத்து விடாதே
புன்னகைத்தாலும்
அருகில் வந்து அமர்ந்து கொள்ளாதே
ஏன் எதற்கென்றே தெரியாமல்
படும் இந்த அவஸ்தையில்
அவ்வப்போது வந்து போகும்
உன் முகம்
சோகத்துடன் சந்தோஷத்தை
சரி சமமாக கலந்து
கட்டிப் போடுவதை
இன்னும் கொஞ்சம்
ரசித்துக் கொள்கிறேன்'
Previous
Next Post »