'தேடுகிற என்னை
தேடுகிறாயாமே
மறுபடி
ஒளிந்து கொள்ளட்டுமா"


கண்கள் பேசும்
தெரியூம்
இதென்ன புதுசாக
கண்கள்
தின்று விட்டதே என்னை



உதடுகளில்
உதடுகள் சிக்கிக்கொண்டது
அப்படியே இரு
எடுத்து விட்டால்
முத்தமென்ற பேர் மட்டுமே
கிடைக்கும்



உனக்காக
காத்திருக்கிறேன்
என்று மட்டும் தெரியூம்
எத்தனை ஜென்மங்களாக
என்று தெரியாது
    

அது உன்
காலடித் தடமல்ல
என் நேசத்தின்
வரைபடம்


விளக்கேற்றிவிட்டு
விரலைத் தேய்க்கையில்
ஏதாவது எழுதுவாயோவென
தினமும் வருகிறேன்
கோவிலுக்கு’
Previous
Next Post »