'எதையூம்
திரும்பிப்பார்க்க
நினைப்பதற்குள்
முந்திக்கொண்டு ஓடுகிறது காலம்
நின்று
இளைப்பாறுவதற்கெல்லாம்
அனுமதி மறுத்துவிடுகிறது நேரம்
இந்த
ஓட்டம் எப்போது முடிவூறும்
என்று தெரியாதது
சுவாரஸ்யமா தண்டனையா
தெரியவில்லை
நின்று பேச
அருகில் யாருமில்லை
உடன் வருபவரெல்லாம்
ஆளுக்கொரு ஓட்டத்தில்
அரை மனதாய்...அவசரமுகத்துடன்...
நட்பு சினேகம் காதல்
என்று எதுவூம் இங்கே
நிஜமாக இல்லை
ஒரே நிஜம்
இந்த ஓட்டம் மட்டும்தான்
எனவே
ஓடு...ஓடு...ஓடு...
ஓட்டம் நின்றபின்னே
துரர எறியப்படுவோமென்று
நன்றாக தெரிந்திருந்தும்
கால்களும் மனதும்
வலிக்க வலிக்க

தொடர்கிறது ஓட்டம்...'
Previous
Next Post »