'எப்போது
எழுத நேர்ந்தாலும்
கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாக
மனம்
உன்னை தேடி ஓடிவிடுகிறது
எத்தனை வரிகள்
எழுதினாலும்
உனக்காகவே எழுதுவதுபோல்
ஒரு பிரமை
ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது
வார்த்தைகள்
தானாக வந்து விழுகிறதா
இல்லை
நீயாக எங்கிருந்தோ
அனுப்பிக்கொண்டே இருக்கிறாயா
ஏன் எழுதுகிறேனென்று
புரியாமல்
யார் வாசிக்கப்போகிறார்கள்
என்றும் தெரியாமல்
கரையில்
வந்து வந்து விழும்
அலைகள் போல
எழுதிக்கொண்டே இருக்கிறேன்
நீ
நிச்சயம்வாசிக்கமாட்டாய்
என்று தெரியூம் எனக்கு
வாசிப்பவர் யாராவது
உன்
வசிப்பிடத்தின் அருகில்
இருக்கலாமென்றுதான்
இன்றைக்கும் எழுதுகிறேன்
இன்னும்
கொஞ்சம் எழுத வேண்டும்
எழுதுகிறேன்
ஆனால்
கடைசிவரியை மட்டும்
உன்

பெயரால் எழுதட்டுமா'
Previous
Next Post »