'உன்
கையில் கட்டியதும்
கடிகார முட்களுக்கு கூட
காதல் வந்து விடுகிறது
சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
உன்னை
சுற்றிச் சுற்றியே வருகின்றன'

'உன்
ஒவ்வொரு புன்னகைக்கும்
ரோஜாக்களுடன் சேர்ந்து
முட்களும்
பூக்கத் தொடங்கி விடுகின்றன'

'உன்
உள்ளங்கை ரேகைகள் கூட
எனக்காக
சங்கேத வார்த்தைகளாகத்தான்
தோன்றுகின்றன'

'நீ
சொல்லாத வார்த்தைகளை
நாளைக்குச் சொல்வாய் என்றெண்ணி
பிரிவதில்தான்
மௌனத்தைப் புரிந்து கொள்ளாத
ஆண்புத்தியின்
அவசரம் இருக்கிறது'

'நட்சத்திரங்களைப்
பார்க்கும்போதெல்லாம்
உன் வரவிற்காக
வானம் வைத்துள்ள கோலப்புள்ளிகளாக
தோன்றுகிறது

'சொல்லச் சொல்ல
கேட்காமல்
நேற்றெதற்கு மழையில் நனைந்தாய்
பார்
காளான்கள்
இன்றைக்கு குடைபிடித்துக் கொண்டு
நிற்கின்றன உனக்காக'

சொன்ன நேரத்தில்
வருவதேயில்லை
நானென்று
அவளது கைக்கடிகாரத்தை
கழற்றி விடச் சொன்னேன்
காத்திருக்கும் நேரத்தில்
கடிகார முட்கள்
குத்தி விடக்கூடாதே அவளை..

'உன்
மடியில் தலைசாய்த்துக் கொள்ளும்
போதெல்லாம்
கனவூ கலைந்து விடப்போகிறதே
என்ற பதட்டம் வருகிறது
மடியூம் அணைப்பும்

நிஜமாக இருந்தபோதும்'
Previous
Next Post »