'முத்தம்
என்பது மடமையடா
இதயங்கள் கேள்வியின்றி
இடம் மாறிவிட்டபின்'

"கூகுள்
விளம்பரங்கள் போல்
எட்டிஎட்டிப்பார்க்கிறாளே
என் மனதிலுள்ள கீவேர்ட்களை
படித்திருப்பாளோ'

'இரவூம் பகலும்
மாறி மாறி வந்து கொண்டேயிருப்பது
போட்டி போட்டுக் கொண்டு
அவளைக் காணத்தானோ?'

'சொல்லாத காதல்
ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதால்தான்
சுவாரஸ்யமில்லாவிட்டாலும்
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதோ"

'எதற்காகவோ
நாளையபொழுதுகளை
மறைத்தே வைத்திருக்கிறான் இறைவன்
பொருள் புரியாமல்
அவளது புன்னகையைப் போல'

'ஒற்றைக் குரலில்
ஓங்கித் தனித்து
யூவன்சங்கர்ராஜா பாடும்போதெல்லாம்
நினைவூகள்
பின்னால் போவதை தடுக்க முடிவதில்லை'

'காதலும் அவஸ்தையூம்
இல்லாதிருந்தால்
பரிணாமவளர்ச்சி வீணாகியே
போயிருந்திருக்கும்'

'உன்
காலடி நிலம் மட்டுமல்ல
காலடி படாத நிலமும் உன்னுடயதுதான்
நீ வளர வளர
உன் நிழலே
உலகை ஆக்கிரமிக்கும் பார்'
Previous
Next Post »